பள்ளிகளுக்கு மீண்டும் பிப்.7 முதல் ஒரு மாதம் விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் உற்சாகம்!
இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று இலங்கை கல்வித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் குஷி:
உலகில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் 3 ஆம் அலையின் துவக்கமாக கொரோனா புது உருவமான ஓமைக்ரான் தொற்று அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலங்கையிலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் இலங்கையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இலங்கையில் நோய்த்தொற்று குறைந்து காணப்பட்டதால் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது. தற்போது இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஒரு மாத காலம் மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று இலங்கை கல்வித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.90,000 வரை சம்பள உயர்வு? கணக்கீட்டு விவரங்கள் இதோ!
இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்க்கல்வி பொது தகுதித்தேர்வு (GCE) பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் என்று இலங்கை கல்வித்துறை ஆணையம் ஜனவரி 31 ஆம் தேதி அறிவித்தது. அதனை கருத்தில் கொண்டு வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மார்ச் 6 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து கல்வி நிலையங்கள் மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சக வட்டாரங்கள் அறிவித்துள்ளன.