பிப்ரவரி 14 வரை இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காக்கிநாடா மாவட்டத்தில் தற்போதுள்ள நோய் தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு பிப்ரவரி 14ம் தேதி வரை தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
மாநிலம் முழுவதும் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிப்ரவரி 14 வரை நீட்டித்து ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இப்போது மாநில அரசின் கூற்றுப்படி, இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தினந்தோறும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படும். இந்த ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசியமற்ற அனைத்து இயக்கங்களும் தடைசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மாநில அரசின் அறிவிப்பின் படி, ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடா மாவட்டத்திலும் பிப்ரவரி 14ம் தேதி வரை தினசரி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும் என மாவட்ட ஆட்சியர் சேவூரி ஹரி கிரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர், ‘அரசு உத்தரவின் படி காக்கிநாடாவில் இரவு நேர ஊரடங்கு தொடரும். பொது இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். மீறினால் ரூ.100 அபராதம் செலுத்த நேரிடும். அதே நேரத்தில் வணிக நிறுவனங்கள், முகக்கவசம் அணியாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது.
பள்ளிகளுக்கு மீண்டும் பிப்.7 முதல் ஒரு மாதம் விடுமுறை அறிவிப்பு – மாணவர்கள் உற்சாகம்!
அதை மீறுவதும் குற்றமாகும். இந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக அமல்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அவசர சேவைகள் தவிர வேறு எந்தவொரு சேவைகளுக்கும் அனுமதி கொடுக்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இப்போது காக்கிநாடா மாவட்டத்தில் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்துவதற்காக அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தவிர கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்ற தொடர்ந்து சேவையாற்றும் அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 188 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பிற விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.