அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் – யூனியன் பட்ஜெட் 2022-23 ஒரு பார்வை!
இந்திய நாடாளுமன்றத்தில் 2022-23 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் அரசு ஊழியர்கள்,பள்ளி மாணவர்கள், பட்டதாரிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்
இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தற்போது தான் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு மீண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த சூழ்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் யாவும் கிடைக்காமல் இருந்தது. தற்போது 2022ம் ஆண்டுக்கான, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய மாநில அரசுகள், வழங்கி வருகிறது. மேலும் 2022-23 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ், சூடுபிடிக்கும் ஏலம் – ஒரு சிறப்பு தொகுப்பு!
இந்த வகையில் இரண்டாவது முறையாக காகிதமில்லா முறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இது நிர்மலா சீதாராமன் வெளியிடம் நான்காவது நிதிநிலை அறிக்கை ஆகும். இந்த அறிவிப்புகளில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான 2022-23 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அதில் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10% என்பதிலிருந்து 14% என்று உயர்ந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2 மணிநேரம் தளர்வுகளுடன் மீண்டும் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் மாநில அரசு ஊழியர்களுக்கு, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஓராண்டு அவகாசம் இருந்த நிலையில், அது இரண்டு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மாநில அரசு ஊழியர்களுக்கு PF வரிச்சலுகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% என குறைந்துள்ளது. மேலும் வரும் ஆண்டில் அரசின் செலவு ரூ.39.5 லட்சம் கோடி என்றும், வரவு ரூ. 22.8 லட்சம் கோடியாக இருக்கும் என்று அமைச்சர் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.