இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவல்!
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் வேலையின்மை அதிகரித்தது. இதனை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு:
நாட்டில் கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த தொற்று அச்சத்தின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏராளமானோர் தங்களின் வேலையிழந்தும் வாழ்வாதாரத்தை இழந்தும் மாத வருமானம் இன்றி சிரமப்பட்டனர். அத்தகைய கால கட்டத்தில் மீண்டும் வேலைவாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வந்தது.
மத்திய அரசின் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு!
ஏனெனில் ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலைக்கு ஆளானது. இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தது. அதனால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டது.அதனால் வேலையிழந்தோர்கள் வெளியில் சென்று மீண்டும் பணிக்கு செல்ல வேலைவாய்ப்புகளை தேட ஆரம்பித்தனர். அப்போது மத்திய மாநில அரசுகள் அரசு துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
அதனை தொடர்ந்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டது. அதே போல தனியார் நிறுவனங்களும் ஆட்கள் சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால் தற்போது வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதத்தில் இருந்து 6.43 சதவீதமாக சரிந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 1.87 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்