மத்திய அரசின் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக அளிக்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
மாணவர்களின் கல்வி இடைநிற்றல் திடீரென்று அதிகரித்ததை கவனித்த மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு பல சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தது. மாணவர்கள் கல்வியை இடை நிறுத்த வறுமை தான் முக்கிய நோக்கமாக இருப்பதை அறிந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்க முன்வந்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அரசின் சூப்பர் அறிவிப்பு!
மத்திய அரசும் அனைத்து மாநிலங்களில் உள்ள 9ம் வகுப்பு மாணவர்கள் முதல் 12ம் வகுப்பு வரை கல்வித்தொகை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும், உதவித்தொகை பெறுவதற்கான மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் 55% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் வேண்டும், மாணவரின் பெற்றோர் ஆண்டிற்கு ரூ, 3,50,000-த்திற்கு மிகாமல் வருமானம் பெறுபவராகவும் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.12,000 அளிக்கப்பட உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்