அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட் – அரசின் சூப்பர் அறிவிப்பு!
பீகார் அரசு பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி புத்தகங்கள் மற்றும் பள்ளி நாட்காட்டி ஏடு போன்றவை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் அறிவிப்பு:
பீகார் பொருளாதார ஆய்வின்படி (2021-22) பீகாரில் மொத்த ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2016-17 ல் 72,981 ஆக இருந்து 2019-20 ல் 75,295 ஆக அதிகரித்துள்ளது. இதில், 42,408 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 32,887 மேல் நிலைப்பள்ளியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டின் விவரங்களின் படி பாட்னா (4,002), கிழக்கு சம்பாரண் (3,852) மற்றும் முசாபர்பூர் (3,201 ) ஆகிய பகுதிகளில் பள்ளிகள் சிறப்பாக அதே சமயம் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு மதிப்பெண்களில் நடந்த குளறுபடி – உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
முன்னதாக பீகாரில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் மகாத்மா காந்தி மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் போதனைகள் அடங்கிய பயிற்சி புத்தகங்கள் மற்றும் நாட்காட்டி ஏடு போன்றவை இலவசமாக அளிக்கப்படும். ஆனால், தற்போது அரசு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பீகார் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் மற்றும் நாட்காட்டி ஏடு இலவசமாக வழங்கப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் பிற செயல்பாடுகளை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு டைரிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கல்வித் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முதல்வர் நிதிஷ் குமார் இந்த முடிவை எடுத்துள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்