நீட் தேர்வு மதிப்பெண்களில் நடந்த குளறுபடி – உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் நடப்பாண்டில் மாணவி ஒருவர் மதிப்பெண் மாறியுள்ளது தொடர்பாக விதிக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு:
தேசிய தேர்வு முகமையால் தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 12ம் வகுப்பை முடித்த மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்படுகின்றனர். உலகத்திலேயே அதிக நபர்கள் கலந்து கொள்ளும் தேர்வாக நீட் தேர்வு உள்ளது. நாடு முழுவதும் உள்ள 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை – முதல்வரின் உத்தரவு! வெளியான சூப்பர் தகவல்!
2022ம் ஆண்டிற்கான நீட் தேர்வு குறித்த தகவல்கள் பொதுத்தேர்விற்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி ஜூலை 17ம் தேதி அன்று நீட் தேர்வுகள் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்களில் தகுந்த கண்காணிப்புகளுடன் நடத்தப்பட்டது. தேர்வின் முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாணவி கிறிஸ்மா விக்டோரியா என்பவர் நீட் தேர்வின் விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியலில் உள்ள மதிப்பெண்கள் தவறாக உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு செய்தார்.
மனுவில் மாணவி, தனது நீட் விடைத்தாளில் 196 மதிப்பெண்கள் உள்ளதாகவும், NTA வெளியிட மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என்றும் உள்ளதாக தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையின் தலைமையிடமான நொய்டாவில் இருக்கும் அலுவகத்திற்கு விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை மாணவி நேரில் சென்று காணலாம் என்று அறிவித்துள்ள நிலையில், மாணவி நேரில் வந்தால் விடைத்தாளை காண்பிக்க தயார் என்று தேசிய முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்