இந்தியாவில் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைவு – அரசின் பண்டிகை கால சிறப்பு பரிசு!

0
இந்தியாவில் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைவு - அரசின் பண்டிகை கால சிறப்பு பரிசு!
இந்தியாவில் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைவு - அரசின் பண்டிகை கால சிறப்பு பரிசு!
இந்தியாவில் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைவு – அரசின் பண்டிகை கால சிறப்பு பரிசு!

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மானிய தொகையை மேலும் அதிகரித்து அறிவித்துள்ளது.

தீபாவளி பரிசு:

மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக பிரதமர் உஜ்வாலா திட்டம்’ 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 9.60 கோடி குடும்பங்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் மானிய ஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிலிண்டர் மானிய தொகை ரூபாய் 200 ஆக வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் பிரபல நிறுவனத்தில் Trainer பணிக்கான வேலைவாய்ப்பு – மிஸ் பண்ணிடாதீங்க!

இந்நிலையில் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மற்றும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக சிலிண்டர் மானியத்தை மேலும் ரூபாய் 100 அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதன் மூலம உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் மானியம் ரூபாய் 300 ஆக உயர்த்தப்படும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!