இன்று தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்த நிலையில் இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரியின் மாம்பழத்துறையாறு பகுதியில் 5 சென்டிமீட்டர் மழை அளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோட்டில் அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அக்டோபர் ஐந்தாம் தேதியான இன்று முதல் 11ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிலிண்டர் விலை மேலும் ரூ.100 குறைவு – அரசின் பண்டிகை கால சிறப்பு பரிசு!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை அறிக்கையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.