ஆதார் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி – chat bot அறிமுகம்.. இனி விவரங்களை அறிவது எளிது!
இந்தியாவில் ஆதார் அமைச்சகம் ஆதார் அட்டைதாரர்களுக்கு தேவையான வசதிகளை அளிக்கும் நோக்கில் புதிய சாட்போடை உருவாக்கியுள்ளது. இதன் பயன்கள் என்னவென்று இப்பதிவில் காண்போம்.
ஆதார்:
இந்திய குடிமக்களின் அடையாள ஆவணமான ஆதார் இன்றைக்கு அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது. தற்போது ஆதார் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்து விட்டது. அதனால் தான் ஆதார் அமைச்சகம் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. பெற்றோர்களின் விவரங்களை வைத்து குழந்தைகளுக்கு ஆதாரை எளிதாக பெறலாம்.
தமிழக அரசின் மாஸ் பிளான்.. ‘நலம் 365’ யூடியூப் சேனல் – இன்று முதல் தொடக்கம்!
Follow our Instagram for more Latest Updates
தற்போது ஆதார் அட்டையில் அவ்வப்போது தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று ஆதார் அமைச்சகம் ஆதார் அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆன்லைன் வாயிலாக இத்தகைய திருத்தங்களை மேற்கொள்ளும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய AI/ML சாட்போட் ‘Aadhaar Mitra’ – வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சாட்போட் ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களையும் அட்டைதாரர்களுக்கு அளிக்கிறது. அதாவது இந்த சாட்போட் பிவிசி ஆதார் கார்டுகளின் தற்போதைய நிலைமையை கண்காணிக்கும். அத்துடன் ஆதார் மையம் நீங்கள் வசிக்கும் பகுதிகளின் அருகே எங்கு உள்ளது என்பதை காட்டும். மேலும் உங்களின் ஆதார் கார்டு பதிவு மற்றும் புதுப்பிப்பு விவரத்தை தெரியப்படுத்தும் வகையில் இந்த Chatbot செயல்படும்.