தேர்வு இல்லாமல் மத்திய அரசில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Deputy General Manager / Chief Superintendent / Chief Controller பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10.08.2022 அன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் நாளையுடன் முடிவடைய உள்ளதால் விண்ணப்ப விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Deputy General Manager / Chief Superintendent / Chief Controller பணிக்கு என 06 பணியிடங்கள் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (UCIL) காலியாக உள்ளது.
- இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 15 ஆண்டுகள் முதல் 18 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
TN Job “FB Group” Join Now
- அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering, Chemical Engineering, Mining Engineering பாடப்பிரிவில் Degree அல்லது PG Degree அல்லது Diploma Degree அல்லது MBA Degree படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- 10.08.2022 அன்றைய நாளின் படி, Deputy General Manager பணிக்கு 48 வயது எனவும், Chief Superintendent / Chief Controller பணிக்கு 45 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களிடம் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், SC / ST / PWD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Deputy General Manager பணிக்கு ரூ.90,000/- முதல் ரூ.2,40,000/- வரை என்றும், Chief Superintendent / Chief Controller பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.2,20,000/- வரை என்றும் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
UCIL விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (10.08.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.