தமிழக அரசில் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை & சுருக்கெழுத்தர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர், அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து 2022 – 2023 ஆண்டுக்கான உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் பணியிடங்ககளை நிரப்புவதற்கு விவரங்கள் சேகரிக்க, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு அளித்துள்ளார்.
பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்ததால், அதன் பலனாக தற்போது நிலைமை சீராகி வருகிறது. இந்நிலையில் அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகிய நிலையில், பட்டதாரிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா தாக்கத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மார்ச் 13 முதல் தெப்பத்திருவிழா!
இதனால் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்புவதற்கு விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சுப் பணி துறையில் காலியாக இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரம்பிற்குட்பட்ட தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட தனியானதொரு திட்டம் வகுக்கப்பட்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என அரசு செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – இறுதிப்பட்டியல் வெளியீடு!
இது குறித்து அரசு செயலாளர் அனைத்து துறை தலைவர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நடுவர்கள், செயலாளர்கள், TNPSC , தொழில்நுட்ப கல்வி இயக்ககம் போன்றவற்றிக்கு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். எனவே உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் நிலை II / சுருக்கெழுத்தர் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிட மதிப்பீட்டினை தயார் செய்யும் பொருட்டு 15.03.2022 முதல் 14.03.2025 வரை பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்கள் விவரங்களை சேகரிக்க, பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.