நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இரு நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
நேபாள அரசு தற்போது அரசு அலுவலகங்களுக்கு இரண்டு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக அதிகரித்து உள்ளது. அதனை தொடர்ந்து பெட்ரோல், டீசல் நுகர்வை குறைப்பதற்காக இரண்டு நாள் அரசு விடுமுறை அளிப்பதற்கு நேபாள அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அரசு விடுமுறை:
உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பிறந்த நாடு சீனாவில் உள்ள வூகான் பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. இந்நிலையில் தற்போது தான் சீனா ஊரடங்கில் இருந்து வெளிவந்த இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகமாகி விட்டதால் சீனா மீண்டும் லாக்டவுனைக் கொண்டு வந்துள்ளது. வீடு வீடாக சென்று டெஸ்ட் போன்ற பல நடவடிக்கைகளை செய்து வருகிறது.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து இருந்த காரணத்தால் பொருளாதார சீர்கேடுகள் நடைபெற்றது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் நுகர்வை குறைப்பதற்காக இரண்டு நாள் அரசு விடுமுறை அளிப்பதற்கு நேபாள அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் இலங்கை நாட்டை போலவே நேபாளமும் தற்போது பொருளாதார சீர்கேட்டில் ஆரம்ப நிலையில் இருந்து வருகிறது. மேலும் நேபாள நாடு அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
எட்டாம் வகுப்பு, ITI முடித்தவர்களுக்கு ரூ.52,400/- ஊதியத்தில் அரசு வேலை ரெடி..!
எனவே தற்போது அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என நேபாள அரசுக்கு நேபாள மத்திய வங்கியும், நேபாள ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் கூறியுள்ள காரணத்தால் தற்போது நேபாள அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் அரசு அலுவலகத்தில் விடுமுறை விடும் நாட்களில் இந்த அரசு ஊழியர்கள் யாரும் தங்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க கூடாது என்றும் கூறியுள்ளனர்.