தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
வெள்ள நிவாரணம்
தமிழகத்தில் கடந்த டிச. 18 ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அதனால் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் வெள்ள சேதாரங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அதன் பின் மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கியது போல, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கும் ரூ. 6000 ரொக்கம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரூ. 1000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
எண்ணூர் எண்ணெய் கசிவு.. மக்களுக்கு ரூ.12,500 நிவாரணம் – அரசு அறிவிப்பு!