தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (TSRTC) தனது ஊழியர்களுக்கு 43.2 சதவீத அகவிலைப்படியை (DA) வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (TSRTC) தனது ஊழியர்களின் அகவிலைப்படியை திருத்தி இருக்கிறது. அதன் படி 3.2 சதவீத அகவிலைப்படி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட டிஏ ஊதிய திருத்தத்திற்குப் பிறகு அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்பட்டு,வழங்கப்படும். மேலும் சமீபத்தில் மாநில அரசு வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
DRDO ஆணையத்தில் ரூ.37,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
எனவே இது இரண்டுமே ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும் HRA திருத்தம் RTC ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அதனால் ஊழியர்கள் சற்று கவலை அடைந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வால் அவர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. RTC ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் TSRTC நிர்வாக இயக்குனர் VC சஜ்ஜனரின் தீவிர முயற்சியால் தற்போது இந்த மாற்றங்கள் வந்துள்ளது.