‘இவர்களுக்கு’ மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

0
'இவர்களுக்கு' மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் - சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலைகளில் பாமக கட்சி தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை:

லோக்சபா தேர்தலுக்கான வேட்பம் மனு தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களின் பெரும்பாலான வேட்பாளர்களின் வேட்ப மனு தாக்கலை முடித்துவிட்டனர். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இதற்கிடையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் பாமக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 143 காலியிடங்கள் – ரூ.89,890/- மாத ஊதியம் || விரைந்து விண்ணப்பியுங்கள்!

அதில் 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு தங்களின் கட்சி வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000, ஒரு டன் கரும்புக்கு ரூ.5,000 கொள்முதல் விலை நிர்ணயிக்க நடவடிக்கை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் துறை, நீதித்துறையில் இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும். 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம். குறிப்பிட்ட காலத்திற்குள் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழகத்திலிருந்து அகற்ற நடவடிக்கை பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்காக ரூ.10 லட்சம் வைப்பீடு. போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!