தமிழகத்தில் போலீசாருக்கு பயண அட்டை, காவல்துறை ஆணையம் – முதல்வர் அறிக்கை!
உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டம்:
தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியாக விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை குறித்து பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.
1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு ஆலோசனை!
உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட நிலையில் தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் கூறியதாவது, தமிழகத்தில் விரைவில் காவல்துறை ஆணையம் அமைக்கப்படும். குறிப்பாக காவலர்கள் பேருந்தில் பயணம் செய்ய பயண அட்டை வழங்கப்படும். காவலர் முதல் ஆணையர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்.
இளைஞர்களின் தொழில் கடன் 41.48 கோடி ரூபாய் தள்ளுபடி – மாநில அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக 10 காவல் நிலையங்கள், 4 தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.275 கோடி மதிப்பில் 896 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும். ஆவடி, தாம்பரம் தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும். பொதுமக்கள் தங்கள் குறைகளை காணொலியில் காவல் நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்க செயலி உருவாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.