1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு ஆலோசனை!
கர்நாடகாவில் தற்போதுள்ள கொரோனா தொற்று சூழலை கவனத்தில் கொண்டு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு ஆலோசித்து வருவதாக அம்மாநில கல்வி அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை தொற்று நாடு முழுவதும் குறைந்து வந்துகொண்டிருக்க கூடிய சூழலில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மாநிலத்திலும் கடந்த மாதம் முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1 முதல் 5 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை துவங்க அரசு ஆலோசித்து வருகிறது.
இளைஞர்களின் தொழில் கடன் 41.48 கோடி ரூபாய் தள்ளுபடி – மாநில அரசு அறிவிப்பு!
இதனிடையே கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளிகள் சங்கம், அம்மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், பள்ளிகளை திறப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கும் போது சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி – முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!!
இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், 2%க்கும் குறைவான கொரோனா நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் மட்டும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை மீண்டும் தொடங்குவது குறித்து நிபுணர்களுடன் அரசு ஆலோசனை செய்தது. இதற்கிடையில், கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 967 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 10 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.