சென்னை வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்து மாற்றம்! மெட்ரோ பணிகள் எதிரொலி!
சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து ஓராண்டுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
சென்னையில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்பணிகள் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கட்டுமான பணிகளின் காரணமாக சென்னையில் நாளை முதல் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு – இன்றைய விற்பனை!
கோடம்பாக்கம், பவர் ஹவுஸ், ஆற்காடு சாலை 80 அடி சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் ஓராண்டுக்கு சென்னையில் போக்குவரத்தில் மாற்றங்கள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை கூறுகையில், போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் ஏதுமில்லை என கூறியுள்ளனர்.
கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடது புறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்பு வரை சென்று, நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னார் சாலை, 80 அடி சாலை வன்னியர் சாலை வழியாக போரூர் சாலிகிராமம் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மெத்வதேவ்! ஜோகோவிச் தோல்வி!
கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக -அம்பேத்கர் சாலை-அசோக் நகர் காவல் நிலையம் – 2-வது அவென்யூ சாலை- 100 அடி சாலை வழியாக சென்று வடபழனியை அடையலாம். அசோக் பில்லர் மற்றும் கோடம்பாக்கம் செல்லும் வாகனங்கள் , அம்பேத்கர் சாலை, அசோக் நகர் காவல் நிலையம் சந்திப்பு வரை சென்று, இடதுபுறமாக 2-வது அவென்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம் என்றும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.