தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் – உயர்நீதிமன்றம் காட்டம்!

0
தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்
தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் – உயர்நீதிமன்றம் காட்டம்!

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

தொடரும் போராட்டம்:

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதற்காக முன்னதாகவும் இது போன்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கை தொடர்பான பேச்சு வார்த்தைகளில் அரசு மற்றும் ஊழியர்களுக்கு இடையில் எந்த விதமான சமாதானமும் ஏற்படவில்லை. இதனால் ஜனவரி 9ம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொங்கல் பண்டிகையின் போது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தேவைதானா?

பண்டிகை காலத்தில் மக்களுக்கு இந்த இடையூறு எதற்கு ? என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர். போராட்டம் நடத்துவது தவறில்லை, ஆனால் பண்டிகை நேரங்களில் செய்வது முறையற்றதாகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அரசு மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருப்பது வருத்தத்திற்குரியதாக உள்ளதாகவும், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழக அரசு இன்று பிற்பகல் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 2:15 மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

TN TRB Annual Planner 2024 – அதிகாரப்பூர்வ வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!