இந்திய ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக பல்வேறு புதிய திட்டங்களையும் மேம்படுத்தி வரும் நிலையில் இன்று முதல் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய திட்டம்:
இந்திய ரயில்வே துறை நாட்டில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்து வாயிலாக பயணித்து வருகின்றனர். எனவே பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வகையான மேம்படுத்துதல் பணிகளையும் செய்து வருகிறது. பெரும்பாலான பணிகள் ஆன்லைன் சேவை வாயிலாகவே செய்து முடிக்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. இருப்பினும் ரயில்வே நிலையங்களில் முன்பதிவு அல்லாத டிக்கெட் எடுக்கும் பட்சத்தில் அதற்கு யுபிஐ வாயிலாக பணம் செலுத்தும் முறை இதுவரையிலும் நாட்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை.
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
இது தொடர்பாக பயணிகள் பலமுறை கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஸ்டேஷனில் எடுக்கும் போது ஆன்லைன் வாயிலாக அதற்கு பணம் செலுத்தும் யு பி ஐ வசதியை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. இதனால் சில்லறை தட்டுப்பாடு, அதிக நேரம் காத்திருப்பது போன்ற பல்வேறு சிக்கல்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.