தமிழக ரயில் பயணிகள் கவனத்திற்கு.. ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரயில்கள் ரத்து!
தமிழகத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் சேவை நிறுத்தம்:
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் சேவையை நாடுகின்றனர். இந்த நேரத்தில் மக்களுக்கு இடையூறு இன்றி சிறந்த முறையில் சேவையை வழங்கும் நோக்கில் ரயில்வே துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ரயில்கள் மற்றும் அவை செல்லும் பாதைகளில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் கோவை – வாஞ்சிபாளையம் சோமனூர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக ரயில்கள் செல்லும் நேரம் மாற்றியமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடவுள்ளது. அதனால் ராமேஸ்வரம் – மண்டபம் வழியாக செல்லும் வாராந்திர விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை கிடையாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.