பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அறிவிக்கப்பட்ட விடுமுறை.. வெளியான உத்தரவு – தஞ்சாவூர் நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சத்குரு தியாகராஜர் சுவாமிகளின் 176-வது ஆராதனை விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் பிறந்தார். இவர் காவிரி நதிக்கரையில் முக்தி பெற்று தெலுங்கு கீர்த்தனைகளை இயற்றினார். இவரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் அமைந்துள்ள அவரது சமாதியில் மகோத்சவ சபையால் ஆராதனை விழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தீவிரம்!
Follow our Instagram for more Latest Updates
நடப்பு ஆண்டு 176-வது ஆராதனை கடந்த 6ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த விழாவை புதுச்சேரி ஆளுநர் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான இசை பிரியர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (ஜன. 11) பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நாளை (புதன்கிழமை) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.