நீங்கள் 10ம் வகுப்பு முடித்துள்ளீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குதான்… ட்ரோன் விமானியாக அரிய வாய்ப்பு!
தமிழகத்தில் வேளாண் துறை சார்பாக ட்ரோன் பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி:
அமெரிக்கா உள்ளிட்ட பல மேலை நாடுகளில் ட்ரோன்கள் பயன்பாடு அதிகமாக இருக்கும். குறிப்பாக வேளாண் துறையில் அதிக அளவு ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையை தமிழகத்திலும் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆளில்லா குட்டி விமானம் (ட்ரோன்) மூலமாக பயிர்களுக்கு யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டம் – QR கோட் மூலம் கழிப்பிடம் குறித்து புகார் அளிக்கலாம்! அரசின் புதிய முயற்சி!
அதனை தொடர்ந்து தற்போது இந்திய வேளாண் துறை சார்பாக ட்ரோன்களை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் திருநங்கைகள் என அனைவரும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை பெற விரும்புவர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ட்ரோன் பயன்பாடு பயிற்சியானது தொடர்ந்து 10 நாட்கள் அளிக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ. 61,100 தொகையை தாட்கோ நிறுவனமே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலம் முடிந்த பிறகு சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் ட்ரோன்களை இயக்குவதற்கான உரிமத்தை வழங்கும். அதன் பிறகு பயிற்சி பெற்றவர் சொந்தமாக ட்ரோன்கள் வாங்க ரூ. 2.25 லட்சம் வரை கடன் பெற தாட்கோ உதவும். பயிற்சி பெற விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.