தமிழக ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வில் முறைகேடு – விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து!
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலமாக கடந்த 2018ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்களை விரிவுரையாளர் வழங்கி இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது இதற்கு உடந்தையான விரிவுரையாளர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வில் முறைகேடு
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை எடுப்பதற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடிக்க வேண்டும். அத்துடன் இந்த 2 ஆண்டு கால பயிற்சியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மற்ற தேர்வுகளிலும் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இந்த தேர்வானது தமிழகத்தில் 2018ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் மொத்தமாக 17 ஆயிரத்து 50 பேர் எழுதி உள்ளார்கள்.
EPFO அக்கவுண்ட் வைத்துள்ளவரா நீங்கள்? உங்களது பேலன்சை தெரிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
இந்த தேர்வு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெளியிடப்பட்டது. இதில் மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு காரணமான 185 விரிவுரையாளர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் மாணவ, மாணவியர்கள் பெற்ற மதிப்பெண்களை விட இன்னும் கூடுதலாக 5 முதல் 50 மதிப்பெண்கள் வரை வழங்கினார் என்பதை ஒப்பு கொண்டார்.
தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை (பிப்.18) விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு!
அதனால் இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்ததாவது, விடைத்தாள் திருத்தம் செய்த 185 விரிவுரையாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இந்த 185 விரிவுரையாளர்களில் 10க்கு அதிகமான மதிப்பெண்கள் வழங்கிய 130 விரிவுரையாளர்களுக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை ஊதிய உயர்வு, பணப்பலன்கள் உள்ளிட்ட பலன்களை வழங்க தடை என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.