தமிழகத்தில் எந்தெந்த பள்ளிகளுக்கு நாளை (பிப்.18) விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தினம் அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக ஓய்ந்து வருவதால், மாநிலம் முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசாணை வெளியானது. இந்நிலையில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளட்சி தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் 26ம் தேதி அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் யார் யாருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்? சுகாதாரத்துறை அறிவிப்பு!
இன்றுடன் தேர்தல் பிரச்சார பணிகள் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்தல் வாக்குச்சாவடிகள் பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடக்கும் பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசாணை வெளியாகி உள்ளது.
PAN CARD தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் பெற எளிய வழிமுறைகள் இதோ!
இந்த வகையில் தேர்தல் காரணமாக 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பள்ளிகள் தேர்தல் வாக்குச்சாவடியாக செயல்படு உள்ளது. எனவே தேர்தல் வாக்கு சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை மற்றும் வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.