PAN CARD தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் பெற எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் அனைத்து வங்கி தொடர்பான சேவைகளுக்கு பான் கார்டு தவிர்க்க முடியாததாகும். இந்த பான் கார்டை தொலைத்து விட்டால் ஆன்லைன் முறையில் திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பான் கார்டு
இந்திய குடிமக்கள் அனைவரும் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். அத்துடன் நாட்டில் வருமான வரி செலுத்துவதற்கு முக்கிய ஆவணமாக பான் கார்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த பான் கார்டு வருமான வரித் துறையின் கீழ் வழங்கப்படுகிறது. பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண் என்பதன் சுருக்கம் ஆகும். இது 10 இலக்க எண்களை கொண்டது. அத்துடன் வங்கிகளில் ஒரே சமயத்தில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை எடுக்கவோ அல்லது பணத்தை செலுத்தவோ வேண்டுமெனில் பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.
Reliance Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இலவச OTT சந்தா ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
மேலும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் கணக்கு அல்லது பே-சிலிப் ஆகியவற்றுடன் பான் கார்டு இணைத்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து இந்த பான் கார்டை வெளியில் செல்லும் போது எடுத்த செல்லவில்லை என்றாலோ அல்லது பான் அட்டையை தொலைத்து விட்டாலோ அதனை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக பெறலாம். இதனை பற்றி கடந்த நாட்களில் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வருமான வரித்துறை, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுக்கு வழிமுறைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது புதிதாக பான் கார்டு பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. முதலாவதாக https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html என்ற இ-பான் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இப்போது இதில் பிறந்த தேதி, பான் விவரம் மற்றும் கேப்ட்சா கோட் உள்ளிட்டவற்றை உள்ளிட வேண்டும்.
3. இறுதியாக Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
4. இப்போது பான் கார்டு பதிவிறக்கம் செய்து தங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.