தமிழகத்தில் யார் யாருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்? சுகாதாரத்துறை அறிவிப்பு!

0
தமிழகத்தில் யார் யாருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்? சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் யார் யாருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்? சுகாதாரத்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் யார் யாருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்? சுகாதாரத்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை:

தமிழகத்தில் கடந்த 2021 டிசம்பர் மாதம் பரவிய ஓமிக்ரான் வைரஸ் தொற்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி மாநிலம் முழுவதும் இரவு நேர மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. உணவகங்கள், அழகு நிலையங்கள், விடுதிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவைகளில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் முயற்சியால் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்தது.

TN TRB TET தேர்விற்கு படிப்பவரா?- ஆன்லைன் வகுப்புகள் | உடனே பாருங்க..!

அதானல் அரசு ஊரடங்கை ரத்து செய்தது. எனினும் அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் சில கூடுதல் தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் 85,579 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை:

  • சளி, காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
  • இணை நோய்கள் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
  • வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
  • வணிக வளாகங்கள் மார்க்கெட் பகுதிகள் மற்றும் பேருந்து, ரயில் நிலையம் போன்ற இடங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!