இது நியூ ட்விஸ்ட்டா இருக்கே.. புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் மூன்று பிரபல ஹீரோக்கள் – ரசிகர்கள் குஷி!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருந்து தற்போது மீண்டும் புது சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகர் கார்த்திக் ராஜ். இவர் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கும் சீரியலில், முன்னணி ஹீரோக்கள் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புது சீரியல்:
ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்து வந்தவர் நடிகர் கார்த்திக். அவர் சேனல் குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீரியலை விட்டு விலகினார். அதன் பின் சொந்தமாக படம் எடுத்த அவர் அதனை வெளியிட முடியாமல் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் கார்த்திக் ராஜ் மீண்டும் ஜீ தமிழ் சேனலில் புதிய சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. அந்த சீரியல் குறித்த அப்டேடிற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் அந்த சீரியல் தெலுங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் கிருஷ்ண துளசி சீரியலின் ரீமேக்காக இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சீரியலில் கார்த்திக் ராஜ்ஜிற்கு ஜோடியாக அவருடைய படத்தில் நடித்த நடிகையே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வெளியான தகவலின் படி 2 முக்கிய நடிகர்கள் இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளே கிளம்பிய பிரச்சனை.. தனலட்சுமி கொடுத்த அறிவுரை -“பிக்பாஸ்” ப்ரோமோ!
Exams Daily Mobile App Download
அதாவது பிரபல நடிகர் நந்தா மற்றும் நடிகர் தினேஷ், கார்த்திக் ராஜ் நடிக்க இருக்கும் புது சீரியலில் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மூன்று நடிகர்களும் ஒரே சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் கார்த்திக் ராஜ் புது சீரியலுக்கு கார்த்திகை தீபம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.