“இதுக்கெல்லாம் கோபி அசரவே மாட்டாரு” பாக்கியலட்சுமி முதல் பாரதி கண்ணம்மா வரை – டாப் கமெண்ட்ஸ்!

0
"இதுக்கெல்லாம் கோபி அசரவே மாட்டாரு" பாக்கியலட்சுமி முதல் பாரதி கண்ணம்மா வரை - டாப் கமெண்ட்ஸ்!
“இதுக்கெல்லாம் கோபி அசரவே மாட்டாரு” பாக்கியலட்சுமி முதல் பாரதி கண்ணம்மா வரை – டாப் கமெண்ட்ஸ்!

தமிழ் சின்னத்திரை சீரியல்கள் பல ஒளிபரப்பாகி வரும் நிலையில், மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் கமெண்ட்ஸ்:

சினிமாவை விட சீரியல்கள் பார்ப்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர். தினமும் அன்றாட வேலைகளில் சீரியலுக்கு தனி நேரம் ஒதுக்கும் அளவிற்கு அனைவரது வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக சீரியல்கள் இருக்கின்றனர். காலை முதல் மாலை வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மனம் கவர்ந்த ஒரு சில சீரியல்களை பார்க்கவே மக்கள் அதிகமாக இருக்கின்றனர். அந்த சீரியலில் இன்று என்ன திருப்பம் ஏற்படுகிறது என்பதை முன்கூட்டியே ப்ரோமோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோட் ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ் பற்றி பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ கண்ணம்மாவை பிடிக்காத பாரதி நான் 6 நாட்கள் தான் இருப்பேன் அப்பறம் நீயே உன் வாயால் என்னுடன் வாழ முடியாது என சொல்ல வைப்பேன் என சவால் விடுகிறார். அதற்காக பல தொல்லைகளை செய்கிறார். இன்றைய எபிசோடில் பாரதி குடித்துவிட்டு வந்து சத்தம் போடுகிறார். மேலும் சௌந்தர்யாவிற்கு போன் செய்து பேச அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரோஷினிக்கு பதில் வினுஷா – TRP இல் தொடரும் நம்பர் 1! ரசிகர்கள் குஷி!

அந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சீரியல பார்க்கும் போது எங்களுக்கும் பாரதிக்கு வந்த மாறி தான் இருக்கு சேம் ஃபீலிங் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் முதலில் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க அதுக்கு அப்புறம் க்ளின் பண்ணுங்க என்று கூறியுள்ளார். முழு நேர கில்மா மற்றும் மொக்க காமெடி சீரியலாக மாறிய பாரதி கண்ணம்மா என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். உண்மையிலேயே இந்த சீரியல் பாக்குரவங்க ரொம்ப பாவம்டா என்று கூறியுள்ளார். அப்ப கடைசி வரை டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுக்க மாட்டீங்க என்று கேட்டுள்ளார்.

ரோஜா

ரோஜா சீரியலில் கொலை செய்தது யாரு என பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. ரோஜா குற்றம் செய்யவில்லை என நிரூபிக்க அர்ஜுன் போராடி வருகிறார். சாக்ஷி அணுவை பார்க்க வர, அவனை கொலை செய்தது உன் ஆளு என்று அர்ஜுனிற்கு தெரிந்துவிட்டது என சொல்ல, அவனை ஜெயிலில் வைத்து கொள்ள அணு திட்டமிடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் என்னாடா ஜெயிலுக்குள்ள பாதுகாப்பு இல்லையா என்று கேட்டுள்ளார்.

முகத்தில் காயத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மற்றொரு ரசிகர் கொலைகார நாடகம் என்று மற்றொருவர் கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் நல்லாதா இருக்கு ஆனா வந்த சீனே திரும்பவும் வர மாதிரி இருக்கு என்று கூறியுள்ளார். கொஞ்சமாவது மாத்தி யோசிங்கடா ஒரு மாதிரி எடுக்குறீங்க என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் போதும் சாமி இதுக்கு மேல தாங்காது 1000 எபிசோடு போனாலும் கதை நகரவே இல்லை அதே இடத்திலேயே சுத்திக்கிட்டு தான் இருக்கு என்று கூறியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடை பையன் கண்ணனை அடிக்க பதறி போன தனம் கண்ணனை பார்த்துக் கொள்கிறார். உதவிக்காக மட்டுமே மூர்த்தி உள்ளே வர சொல்ல கண்ணன் வீட்டுக்குள்ளவே இருக்கிறார். அதனால் மீனா இவன் இங்கே தான் இனிமேல் இருக்க போறானா என முல்லையிடம் கேட்கிறார். பணத்தை நான் எடுக்கவில்லை என அப்பவே அப்பாவிடம் பேசாமல் இருந்தவன் தான நீ என கேட்க, ஆமாம் நானும் போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்யலாம் என சொன்னதாக சொல்கிறார். என் அப்பா மேல புகார் கொடுப்பியா என மீனா கோவப்பட இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஐஸ்வர்யா இருக்கிற வரைக்கும் கண்ணன் அந்த வீட்ல நிம்மதியா இருக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.

கண்ணம்மாவை வம்பிழுக்கும் பாரதி, குடித்து விட்டு வீட்டில் தகராறு – ‘பாரதி கண்ணம்மா’ எபிசோட்!

மற்றொரு ரசிகர் கண்ணன் ரொம்ப நல்ல மனைவிய தான் தேடி புடிச்சிருக்காரு நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் என்ன ஐஸ் குடுபத்தை பிரிக்க உங்க சித்தி மாதிரியே கிளம்பிட்டீங்களே என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் கதிர் செம்ம மாஸ் பட்டையை கிளப்பிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கோபியை ஒன்றாக பார்த்த ராமமூர்த்தி ராதிகா வீட்டிற்கு சென்று அவர் அம்மாவிடம் சத்தம் போடுகிறார். அதனால் கோபியை இனிமேல் இந்த வீட்டிற்கு வர வேண்டாம் என ராதிகா அம்மா சொல்கிறார். அதனால் கோவமாக வந்த கோபி ராமமூர்த்தியிடம் கேள்வி கேட்கிறார். ராதிகாவை பார்க்க மாட்டேன் என கோபியை ராமமூர்த்தி சத்தியம் செய்ய சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தாத்தா மாஸ் பண்றாரு என்ன ராதிகா அம்மாகிட்ட பாக்யாவோட புருஷன்தான் கோபினு சொல்லிட்டு வந்துருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இதுக்கெல்லாம் கோபி அசரவே மாட்டாரு என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இப்படியே போய்க்கிட்டு இருந்தா எப்படி மத்தவங்களுக்கு உண்மை தெரியப்படுத்துங்கள் தாத்தா என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் சூப்பர் சீன் வெயிட்டிங் என்று கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!