
தமிழக மக்களே பத்திரமா இருந்துக்கோங்க.. நாளை (12.11.2022) புரட்டி எடுக்க போகும் புயல் – IMD எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கவுள்ளது. அதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர். இரவு பகலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கிறது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் கடந்த வாரம் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அதனால் தமிழகத்தில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்துள்ளது. மேலும் இது நாளை அதிகாலை தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை (நவ.12)அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன் தற்போது வெளியாகிய தனியார் வானிலை ஆய்வு மைய தகவலின் படி வரும் 15ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளது.