தமிழக கல்லூரிகளில் சேர நாளையே (ஜூலை 27) கடைசி நாள் – முக்கிய அறிவிப்பு!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 22 ஆம் தேதி முடிவுகள் வந்த நிலையில், கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் படி கல்லூரிகளில் சேர நாளை (ஜூலை 27) கடைசி நாள் என்று மாணவர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு நடத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு தன அதன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மேலும் கடந்த மாதம் முதல் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வர கால தாமதம் ஏற்பட்டது.
LPG சிலிண்டருக்கான மானியம் கிடைக்கவில்லையா? உடனே சரி பாருங்க!
அதனால் அந்த மாணவர்கள் விண்ணப்பிக்க கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிக்க கூடாது என யு.ஜி.சி உத்தரவிட்டது. அதன் படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கடந்த 22 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதன் படி முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை கூடுதலாக கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள்நாளை (ஜூலை 27) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.