நாளை (29.10.2022) ஐந்தாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை? முழு விவரம் உள்ளே!!
பொதுவாக வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் இம்மாதத்தில் நாளை (அக் .29) ஐந்தாவது சனிக்கிழமை வருகிறது. இதனால் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற குழப்பம் ஏற்படுகிறது.
வங்கி விடுமுறை
இந்திய ரிசர்வ் வங்கியானது அனைத்து வங்கிகளுக்கும் ஒவ்வொரு மாதத்திற்குரிய விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை குறித்த பட்டியலை வெளியிட்டது. பொதுவாகவே அனைத்து வங்கிகளுக்கும் 2வது சனிக்கிழமை, 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும்.
Exams Daily Mobile App Download
ஆனால் இந்த மாதத்தில் 5வது சனிக்கிழமை வந்துள்ளதால் 5வது சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா முழுவதும் செயல்படும் வங்கிகளுக்கு 2வது, 4வது சனிக்கிழமைகளை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நிறுவனத்தில் அதிரடியாக நீக்கப்பட்ட 4000பணியாளர்கள் – நிறுவனத்தின் அதிர்ச்சி அறிக்கை!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி 5வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது கட்டாயம். அதனால் நாளை (5வது சனிக்கிழமை) அக்டோபர் 29,2022 ஆம் தேதி அன்று இந்தியாவில் அனைத்து வங்கிகளும் வழக்கம் போல செயல்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.