Tokyo Paralympics – இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்! கிருஷ்ணா நாகர் வெற்றி!
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் இந்திய அணியின் மொத்த பதக்க எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
பாராலிம்பிக்ஸ் 2020:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை அளித்து உள்ளனர். தற்போது வரை 18 பதக்கங்களை இந்தியா பெற்று பட்டியலில் 26வது இடத்தில் உள்ள நிலையில், தற்போது மேலும் தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இது இந்தியா பெரும் 5வது தங்க பதக்கம் ஆகும். SH6 பேட்மிண்டன் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் வெற்றி பெற்று அசத்தி உள்ளார்.
தமிழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால்!
ஹாங்காங்கின் சூ மேன் கை-யை எதிர்த்து போட்டியிட்ட அவர் 21-17 முதல் செட்டை கைப்பற்ற, 2வது செட்டை 21-16 என்ற கணக்கில் தவறவிட்டார். மூன்றாவது செட்டில் இந்திய வீரர் 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற 2-1 என்ற கணக்கில் தங்க பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்தார். ஏற்கனவே பேட்மிண்டன் போட்டியில் இந்திய IAS அதிகாரி சுஹாஸ் யதிராஜ் வெள்ளி பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அதனை தொடர்ந்து இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.
Tokyo Paralympics : வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் IAS அதிகாரி!
இதனையடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றிலேயே இம்முறை தான் இந்திய அணி அதிக அளவிலான பதக்கங்களை வென்று குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.