Tokyo Paralympics : வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் IAS அதிகாரி!

0
Tokyo Paralympics : சுஹாஸ் யதிராஜ்க்கு வெள்ளி பதக்கம் ! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் IAS அதிகாரி!
Tokyo Paralympics : சுஹாஸ் யதிராஜ்க்கு வெள்ளி பதக்கம் ! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் IAS அதிகாரி!
Tokyo Paralympics : வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்! ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் IAS அதிகாரி!

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் எஸ்எல் 4 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 18 பதக்கங்களை இந்தியா வென்ற சாதனை படைத்துள்ளது.

பாராலிம்பிக் போட்டிகள்:

2020 ஒலிம்பிக் போட்டிகள் இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக மாறி உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று 100 ஆண்டுகால தாகத்தை தணித்தார். இதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. கடந்த ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், இம்முறை தற்போது வரை 18 பதக்கங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. இதில் நான்கு தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்கள் அடக்கம்.

Tokyo Paralympics 2020: தங்கம் வென்றார் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்!

இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் எஸ்எல் 4 போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதற்கான இறுதிப்போட்டியில் யதிராஜ் 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் தங்க பதக்கத்தை தவற விட்டார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். ஆம், நொய்டா மாவட்ட ஆட்சியர் தான் யதிராஜ். இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான மசூரை எதிர்கொண்ட யதிராஜ் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்த போட்டி பரபரப்பாக சென்றது குறிப்பிடத்தக்கது.

Tokyo Paralympics பேட்மிண்டன் – வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் மனோஜ் சர்கார்!

பாராலிம்பிக் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியா பெறும் 3வது பதக்கம் இதுவாகும். முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் சுஹாஸ், இந்தோனேஷியாவின் ஃப்ரெடி செட்டிவானை 21-9, 21-15 என 31 நிமிடங்களில் வீழ்த்தினார். தற்போது உலகின் நம்பர் 3 வீரராக சுஹாஸ் உள்ளார்.அவர் 2017 BWF துருக்கிய பாரா பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அவர் 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!