Tokyo 2020 Paralympic பளுதூக்குதல் – இந்திய வீராங்கனை சகினா கதுன் 5வது இடம்!
Tokyo Paralympic 2020 போட்டியில் பளுதூக்குதல் பைனலில் இந்திய வீராங்கனை சகினா கதுன் 5வது இடம் பிடித்துள்ளார்.
சகினா கதுன் 5வது இடம்:
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் தற்போது டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை போலவே பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகள் படியே செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tokyo Paralympic 2020 – இந்திய வீராங்கனை பவினா படேல் காலிறுதிக்கு முன்னேற்றம்!
தற்போது பாராலிம்பிக் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சகினா கதுன் 50kg பிரிவில் கலந்து கொண்டார். இவர் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதனால் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதிகபட்சமாக சகினா 90 மற்றும் 93 kg எடையினை மட்டுமே தூக்கி பட்டியலில் 5ம் இடத்தினை பிடித்தார். இதனால் இந்தியாவின் பதக்க கனவும் பறிபோனது.
IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – ஜோ ரூட் அசத்தல் சதம்! இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை!
சீன வீராங்கனை ஹு தண்டன் 120kg எடையினை தூக்கி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இன்றைய தினம் நடக்கவுள்ள ஆண்கள் 65kg எடைப்பிரிவில் இந்திய வீரர் ஜெய்தீப் குமார் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.