IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – ஜோ ரூட் அசத்தல் சதம்! இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை!
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 165 பந்துகளில் 121 ரன்கள் விளாசி மேலும் ஒரு சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
டெஸ்ட் போட்டி:
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் டிராவில் முடிய, 2வது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 25ம் தேதி தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் பந்துவீச்சில் கேஎல் ராகுல் டக் அவுட் ஆக பேட்ஸ்மேன்கள் தடுமாற தொடங்கினர்.
ஐ லீக் கால்பந்து தொடருக்கு இன்பன் உதயநிதி தேர்வு – அதிரகாரபூர்வ தகவல்!
ஜேம்ஸ் ஆண்டர்சன் தொடர்ந்து வேகத்தில் மிரட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். மறுபுறம் ராபின்சன், ஓவெர்ட்டன் தங்களது பங்கிற்கு தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்த இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஹமீட், பர்ன்ஸ் என அரைசதம் விளாச, புதிதாக களமிறங்கிய மாலன் 70 ரன்கள் அடித்தார்.
தங்க மகன் நீரஜ் சோப்ராவிற்கு வந்த சோதனை – சர்ச்சை கருத்துகளுக்கு சாடல்!
அதிரடி காட்டிய கேப்டன் ஜோ ரூட் 14 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் அடித்து மேலும் ஒரு சதத்தை பதிவு செய்தார். இந்திய அணி சார்பில் முஹம்மது ஷமி 3, சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 423 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதன் மூலம் 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.