தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – இன்று முதல் டோக்கன் விநியோகம்!

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - இன்று முதல் டோக்கன் விநியோகம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு - இன்று முதல் டோக்கன் விநியோகம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – இன்று முதல் டோக்கன் விநியோகம்!

தமிழகத்தில் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க முதல் கட்டமாக சென்னையில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.

டோக்கன் விநியோகம்:

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், பரிசுத்தொகை, இலவச வேட்டி, சேலை போன்றவைகள் வழங்கப்படும். மற்ற ஆண்டை போல நடப்பாண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசு ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.505 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஜனவரி 3 விண்ணப்பிக்க கடைசி தேதி!

இத்திட்டத்திற்காக அரசு ரூ.1,17,70,000 ரூபாயை நிதியாக ஒதுக்கீடு செய்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பரிசுத்தொகுப்பில் வைக்கப்படவுள்ள பொருட்களை பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜனவரி 3ம் தேதி முதல் பரிசுத்தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமிழ்நாடு வாணிப கிடங்கில் இருந்து பரிசுத்தொகுப்புகளை ரேஷன் கடைகளுக்கு எடுத்து செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் டிச.31ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

தற்போது தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்று தீவிரமெடுத்து வரும் நிலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவித்து சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்ல அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கூட நெரிசலை தவிர்க்க தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பேரில் இன்று முதல் கட்டமாக சென்னையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த டோக்கனில் பரிசு பெறும் நபரின் பெயர், நாள் மற்றும் நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!