தமிழகத்தில் டிச.31ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

0
தமிழகத்தில் டிச.31ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் டிச.31ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் டிச.31ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்பை இழந்து வந்தனர். தற்போது கொரோனா குறைந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை அரசு ஏற்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு இன்னல்களை பொதுமக்கள் சந்தித்து வந்தனர். அதில் குறிப்பாக இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்பை இழந்து வந்தனர். அதனால் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் அநேக இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்வேறு வேலைவாய்ப்பை உருவாக்கி வருகின்றனர். அதன் காரணமாக நாளை (டிச.31) சிவகங்கை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

அனைத்து அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – 3.68% ஃபிட்மெண்ட் பாக்டர் உயர்வு! தகவல் வெளியீடு!

இந்த முகமானது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து தங்களின் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை என அனைவரும் பங்கு பெற்று கொள்ளலாம். மேலும் ஐடிஐ, டிப்ளமோ ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். அத்துடன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் பங்கு பெறலாம்.

தமிழக கூட்டுறவு சங்கங்ககளில் நகைக்கடன் பெற்ற 13,47,33 பேருக்கு தள்ளுபடி – அரசு உத்தரவு!

இம்முகாமில் கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும். இம்முகாமில் தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியிடங்களை பெற்று பயன் அடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!