தமிழக கூட்டுறவு சங்கங்ககளில் நகைக்கடன் பெற்ற 13,47,33 பேருக்கு தள்ளுபடி – அரசு உத்தரவு!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்ற 13,47,000 பேருக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நகைக்கடன்:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு வாக்குறுதி அளித்தபடி கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நகை கடன்களை ரத்து செய்ய 6 ஆயிரம் கோடி அரசுக்கு செலவு ஆகும். தற்போது அரசு உள்ள நிதி நெருடி நிலையில் அனைவரது கடைகளையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் நிபந்தனைகளின் அடிப்படையில் தள்ளுபடி செய்ய முடிவு செய்து சங்கங்களில் நகைக்கடன் வாங்கியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 2021ம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. 40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் இருந்தாலும் கூட அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க ஊழியர் மாற்று பிற அரசு ஊழியர்களுக்கு நகைக்கடன் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது தயாராகியுள்ள பட்டியலின்படி 13,47,33 பேர் நகைக்கடன் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடல்? மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்! அரசின் திட்டம் என்ன?
இவர்களின் விவரங்கள் மாவட்ட வாரியான பட்டியல் அந்தந்த மண்டல இணை பதிவாளர்களுக்கு எக்செல் படிவத்தில் இ-மெயில் மூலம் அனுப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி பெறுபவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து இறுதி ஒப்புதல் வந்த பிறகு நகைக்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அரசு அறிவுறுத்தியுள்ளது. தகுதி பெற்ற அரசு விதிமுறைகளுக்கு வராத 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.