அனைத்து அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – 3.68% ஃபிட்மெண்ட் பாக்டர் உயர்வு! தகவல் வெளியீடு!
இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் ஃபிட்மெண்ட் பாக்டர் உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய தகவல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபிட்மெண்ட் பாக்டர் உயர்வு:
இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அதாவது அனைத்து அரசு ஊழியர்களுக்கும் DA, HRA, TA உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் அகவிலைப்படி(DA) மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 3% உயர்த்தி வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் உயர்வு புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கங்ககளில் நகைக்கடன் பெற்ற 13,47,33 பேருக்கு தள்ளுபடி – அரசு உத்தரவு!
இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஃபிட்மெண்ட் பாக்டர் அதிகரித்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஃபிட்மெண்ட் பாக்டர் கடந்த 2016ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. பின்னர் அதே வருடம் 7வது ஊதிய குழுவும் உருவாக்கப்பட்டது. அதனால் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு பொருத்துதல் காரணியை (Fitment Factor) உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய உயர்வானது வரும் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை இரண்டரை மடங்குக்கு மேல் உயர்த்தும் விதமாக கொண்டுவரப்பட்டது தான் இந்த ஃபிட்மெண்ட் பாக்டர் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு ஃபிட்மெண்ட் பாக்டர் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 2.57% லிருந்து 3.68% உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்கும் விதமாக அரசு ஃபிட்மெண்ட் பாக்டர் 3.68% உயர்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.31,740 வரை ஊதியம் கிடைக்கும். இத்தகைய தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.