தமிழகத்தில் கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை – உஷார் மக்களே!!

0
தமிழகத்தில் கொட்டி தீர்க்க காத்திருக்கும் மழை – உஷார் மக்களே!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழையும், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் அதிக அளவில் வெயில் காரணமாக அதிக வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் ஜூலை 31ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை இப்பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி விலையில் புதிய மாற்றம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை வங்க கடலின் தென் தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும்.

இதே போல் அரபிக் கடலின் வடக்கு கர்நாடக பகுதிகளில் சூறாவளி காற்று இன்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகமாக வீசப்படும் என்பதால் மிக குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!