அரிசி விலையில் புதிய மாற்றம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!
நாட்டில் தற்போது அரிசி வலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரிசியின் விலை குறைவு:
நாட்டில் பருவமழை மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணங்களினால் அதீத மழை பொழிவு இருந்தது. அதன் மூலம் விளைநிலங்கள் மற்றும் விலை பொருள்கள் அனைத்தும் அதிகளவில் சேதம் அடைந்தது. இதனால் உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. மேலும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டதால் போக்குவரத்திற்கான செலவும் அதிகரித்தது. எனவே ஜூலை மாதத் தொடக்க முதல் பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்து சேவைக்கு தடை – போக்குவரத்து கழக உத்தரவு!!
தக்காளியின் விலை எதிர்பாராத உச்சத்தை தொட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து அரிசியின் விலையும் கிலோவிற்கு ரூபாய் பத்து வரை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் கடந்த வாரம் வெளியாகிறது. அதனை தொடர்ந்து மத்திய அரசு நாட்டில் பாஸ்மதி அரிசியை தவிர மற்றவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்றுமதி செய்ய வைத்திருந்த அரிசியை வர்த்தகர்கள் உள்நாட்டு சந்தை விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் அரிசியின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. தற்போது சோனா மசூரி, ஸ்டீம் ரைஸ், வெள்ளை பொன்னி அரிசி, வெள்ளை பொன்னி புழுங்கல் அரிசி போன்ற அரிசி வகைகள் கிலோவிற்கு ரூபாய் இரண்டு வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.