தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
கேரளா கடலோரப் பகுதிகளின் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஜன.13 முதல் 16 ஆம் தேதி வரை வறண்ட வானில் நிலவ கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் கடலோர பகுதிகள், மன்னர் வளைகுடா, குமரி கடல் மற்றும் மாலத்தீவு, வங்கக்கடல் ஆகிய கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் ஜனவரி 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது