தமிழக உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை – UGC வெளியீடு!
தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
யுஜிசி சுற்றறிக்கை
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலை மானிய குழு யுஜிசி கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. அந்த வகையில் அனைத்து மாநிலங்களுக்கும் யுஜிசி சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ-ன் அங்கீகாரம் பெற வேண்டும்.
அதன் படி பொறியியல் ஆர்க்கிடெக், நகர அமைப்பு, மேலாண்மை, மருந்து உற்பத்தி போன்ற தொழில்நுட்ப படிப்புகள், ஏ.ஐ.சி.டி.இ., விதிகளில் அடங்கும். அது மட்டுமில்லாமல் கணினி அறிவியல் மற்றும் மேலாண்மை சார்ந்த, எம்.சி.ஏ., – எம்.பி.ஏ., முதுநிலை படிப்புகளுக்கு மட்டும் தற்போது ஏஐசிடிஇ வழியே ஒழுங்குமுறை விதிகள் அமைக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இனி வரும் கல்வியாண்டில் பி.பி.ஏ., – பி.சி.ஏ., – பி.எம்.எஸ்., ஆகிய இளநிலை படிப்புகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ., ஒழுங்குமுறை விதிகள் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில பல்கலைகளும் தங்களுடைய இணைப்பில் உள்ள கல்லூரிகளும் ஏ.ஐ.சி.டி.இ., ஒழுங்குமுறை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.