தமிழக அரசு பள்ளிகளில் புதிய மாற்றம் – அமைச்சர் அறிவிப்பு!!

0
தமிழக அரசு பள்ளிகளில் புதிய மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு!!

தமிழக அரசு பள்ளிகளில் வரப்போகும் புதிய மாற்றம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அரசு பள்ளி:

தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் விழாவாக சென்னை நந்தம்பாக்கத்தில் ‘பள்ளிக்கல்வித்துறை விழுதுகள்’ விழா நடைபெற்றது. அந்த விழாவில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, விழாவில் மாணவர்கள் சமூகநீதியை வலியுறுத்தும் விதமாக ஒரு பாடலை பாடினர்.

அந்த பாடல் மாணவர்களின் மத்தியில் அதிக உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்ததால் அமைச்சர் உதயநிதி மாணவர்களின் அசெம்பிளி நேரத்தில் இந்த பாடலை பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இனி தினமும் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் இந்த ”சமூகநீதி” பாடல் பாடப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும், கூடிய விரைவில் இது தொடர்பாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!