இன்று நாடு முழுவதும் 71,000 பேருக்கு மத்திய அரசின் பணி நியமன கடிதம் – பிரதமர் மோடி அசத்தல்!
மத்திய அரசு நாட்டில் உள்ள படித்த இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
பணி நியமனம்:
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வந்த சூழ்நிலையில், மத்திய அரசு இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாக உறுதி அளித்தது. இதற்காக ரோஜர் மேளா என்ற திட்டம் துவங்கப்பட்டு, அதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதல்கட்டமாக 75,000 பேருக்கு இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகள் நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 2022 நவம்பர் மாத நிகழ்வில் 71,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
1000க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் – Wayfair வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
இவர்கள் அனைவரும், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளிலும், மத்திய ஆயுதப்படை பணியாளர்கள், சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், லோயர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர், வருமான வரி ஆய்வாளர்கள் போன்ற துறைகளில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். தற்போது 3ம் கட்டப்பணிகள் நடந்து வந்த நிலையில், ஜனவரி 20ம் தேதியான இன்று காலை 10:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 71,000 பேருக்கு பணிநியமன கடிதங்களை பிரதமர் மோடி அவர்கள் அளித்துள்ளார்.