சென்னை: வரலக்ஷ்மி விரதத்தை ஒட்டி இன்றைய ஆபரணத் தங்க விலை – முழு நிலவரம் இதோ!
தமிழகத்தில் தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அதன் மீது உள்ள மோகம் குறையாமல் இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ. 38,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை:
கடந்த மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது அதனை தொடர்ந்து தங்கம் விலை கணிசமாக உயரத் தொடங்கியது. தங்கத்தின் விலையானது சவரனிற்கு ரூ. 1000 வரை அதிகரித்துள்ளது. அதன் பின் தங்கம் விலையானது ஏற்ற தாழ்வுடன் இருந்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கம் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் அதற்கு அடுத்த நாளே தங்கம் விலையானது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலையில் மாற்றம் இருந்தாலும் அதனை வாங்குவோர் மோகம் குறையாமல் இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனிற்கு ரூ. 160 குறைந்து ரூ. 38,360க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனால் நகைப் பிரியர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக தங்கம் விலையானது திடீரென அதிகரித்தது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 38,920க்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,865க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 270 சிறப்பு விடுப்பு? முக்கிய அறிவிப்பு
அதே போல சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வெள்ளி விலையானது ரூ. 63.60க்கும், ஒரு கிலோ ரூ. 63,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வரும் நிலையில் இன்று வளரலக்ஷ்மி விரதத்தை ஒட்டி விலையில் எந்த மாற்றமும் இல்லாததால் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகவும், சாமானிய மக்களுக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது.