இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் – சற்று குறைந்த பாதிப்பு! நிம்மதியில் மக்கள்!
இந்தியாவில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள் மற்றும் இறப்பு விகிதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கொரோனா பரவல்
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பரவல் தொடங்கி தற்போது வரை பரவி வருகிறது. தொடர்ந்து நாட்டில் இதுவரை 3 அலைகள் வரை கொரோனா பரவல் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மருந்துகளும், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
Exams Daily Mobile App Download
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 19 ஆயிரத்து 400 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கொரோனா பாதிப்பை விட சற்று குறைவாக உள்ளது. ஆனால் ஒரு நாளில் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – MP அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
இதே போல் இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் இதுவரை 4 கோடியே 34 லட்சத்து 65 ஆயிரத்து 552 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அத்துடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் 2,05,92,20,000 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.