உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை.. ஒரே நாளில் ரூ.40 உயர்வு – இன்றைய அப்டேட்!!
ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது இன்று சவரனுக்கு ரூபாய் 40 அதிகரித்து உள்ளது. தினசரி விலை ஏற்றத்தின் காரணமாக நகை வாங்க திட்டமிட்டுள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
ஆபரணத் தங்கத்தின் விலை ஆனது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த பத்து நாட்களுடன் ஒப்பிடும்போது வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 5480 க்கும், ஒரு சவரன் ரூபாய் 40 உயர்ந்து 43 ஆயிரத்து 840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சந்திராயன்-3 லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் – பிரதமர் அறிவிப்பு!
மேலும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 5950 க்கும், ஒரு சவரன் ₹47,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் இன்று ஒரு கிராம் ரூபாய் 80 க்கும், ஒரு கிலோ ரூபாய் 80,000 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தினசரி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால் மக்கள் இவற்றின் விலைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.